பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஊர்வலத்தை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்‌..!

கோவை: கோவையில் நாளை(பிப்., 14) பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நாளை(பிப்., 14) பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

1) கோவை கிராஸ்கட்‌ ரோடு மற்றும்‌ 100 அடி ரோடிலிருந்து வடகோவை மேம்பாலம்‌ வழியாக மேட்டுப்பாளையம்‌ சாலை வரக்கூடிய வாகனங்கள்‌ அனைத்தும்‌ ஷோபிகா கார்னர் சந்திப்பிலிருந்து வலதுபுறம்‌ திரும்பி பவர்‌ ஹவுஸ், சிவானந்தா காலணி வழியாக மேட்டுப்பாளையம்‌ சாலை செல்ல வேண்டும்‌.

2) பூமார்கெட்‌ மற்றும்‌ புருக்பாண்ட்‌ ரோடு வழியாக மேட்டுப்பாளையம்‌ சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள்‌ அனைத்தும்‌ அவினாசி சாலை மேம்பாலத்திலிருந்து நேராக. மில்‌ ரோடு, கக்கரவார்போட்டை வழியாக காந்தியார்க்‌ அடைந்து தடாகம்‌ ரோடு வழியாக செல்ல வேண்டும்‌.

3) சாய்பாபா காலனி என்‌.எஸ்.ஆர்‌ சாலையிலிருந்து மேட்டுப்பாளையம்‌ சாலை வந்து காந்திபுரம்‌ செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் என்‌.எஸ்‌.ஆர்‌ ரோடு மேட்டுப்பாளையம்‌ ரோடு சந்திப்பிலிருந்து இடது பக்கம்‌ திரும்பி ஏ.ஆர்‌.சி. சந்திப்பு சிவானந்தா காலனி, வழியாக செல்ல வேண்டும்‌.

4) மேட்டுப்பாளையம்‌ சாலையிலிருந்து கங்கா மருத்துவமனை வழியாக காந்திபுரம்‌ மற்றும்‌ உக்கடம்‌ செல்லக்கூடிய வாகனங்கள்‌ ஏ.ஆர்‌.சி.சந்திப்பில்‌ இடதுபுறம்‌ திரும்பி சிவானந்தா காலணி வழியாக செல்ல வேண்டும்‌.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் இந்த பேரணியானது அவிநாசிலிங்கம் இரண்டாம் கேட் நுழைவு வாயில் முன்பு துவங்கி மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி, காமராஜபுரம் சாலை வழியாக வலதுபுறம் மீண்டும் திரும்பி ஈஸ்ட் டி.வி சாமி சாலை வழியாக தலைமை தபால் நிலையம் அருகே பேரணி நிறைவடையும்.

மேலும் பேரணி நடைபெறுவதையொட்டி ஏடிஜிபி ஜெயந்த் முரளி (சட்டம் மற்றும் ஒழுங்கு) தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல, இந்த பாதுகாப்புப் பணிகளுக்காக மேற்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரும் மதுரை மாநகர மாவட்ட போலீசாரும் கோவை வந்துள்ளனர்.

பொது மக்களும்‌ வாகன ஒட்டிகளும்‌ இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...