வரும் 28ம் தேதி பொள்ளாச்சி மகாலிங்கம்‌ மற்றும்‌ நாச்சிமுத்து கல்லூரி வளாகத்தில்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டத்தில்‌ அமைந்துள்ள, டா.மகாலிங்கம்‌ பொறியியல்‌ & தொழில்நுட்ப கல்லூரி மற்றும்‌ நாச்சிமுத்து பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி 28.02.2020 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.


கோவை: கோவை மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டத்தில்‌ அமைந்துள்ள, டா.மகாலிங்கம்‌ பொறியியல்‌ & தொழில்நுட்ப கல்லூரி மற்றும்‌ நாச்சிமுத்து பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி 28.02.2020 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது;-

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மூலமாக தனியார்‌ துறையில்‌ வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர்‌, வேலை தேடுவோர்‌ சந்திப்பு நிகழ்ச்சிகள்‌ ஒவ்வொரு வாரமும்‌ வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மைய வளாகத்தில்‌ நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின்‌ மூலம்‌ கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்‌ வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்‌.

மேலும்‌, கோவை மாவட்ட வேலையற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வண்ணம்‌ வரும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌, மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம்‌ இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ வரும்‌ 28.02.2020(வெள்ளிக்கிழமை) அன்று பொள்ளாச்சி வட்டத்தில்‌ அமைந்துள்ள, மகாலிங்கம்‌ பொறியியல்‌ & தொழில்நுட்ப கல்லூரி மற்றும்‌ நாச்சிமுத்து பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது.

இந்த தனியார்‌ துறை வேலைவாய்ப்பு நேர்காணல்‌ நிகழ்ச்சியில்‌ படிக்காதவர்கள்‌ முதல்‌ 10-ம்‌ வகுப்பு, 12ம்‌ வகுப்பு, அனைத்து பட்டதாரிகள்‌, தொழில்கல்வி பயின்றவர்கள்‌, ஐ.டி.ஐ படிப்பு பயின்று சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌ மற்றும்‌ டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள்‌, மேலும்‌ இதுபோன்ற அனைத்து கல்வித்‌ தகுதி உடைய ஆண்‌/பெண்‌ இருபாலருக்கும்‌ நேர்காணல்‌ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ தனியார்‌ துறையில்‌ வேலையளிப்போர்‌ கலந்து கொண்டு தங்கள்‌ நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. இத்தனியார்‌ வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்ளும்‌ மனுதாரர்கள்‌ வேலையளிப்பவருக்கு எந்தவித கட்டணமும்‌ அளிக்க தேவையில்லை. முற்றிலும்‌ இலவசமாக நடத்தப்படவுள்ளது. தேர்வு செய்யப்படும்‌ இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும்‌. இந்நிகழ்ச்சி மூலம்‌ வேலை பெறும்‌ மனுதாரர்களின்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள்‌ தொடர்ந்து தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்‌ வரை தொடர்ந்து புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌.

28.02.2020(வெள்ளிக்கிழமை) அன்று பொள்ளாச்சி உடுமலை சாலையில்‌ உள்ள மகாலிங்கம்‌ பொறியியல்‌ & தொழில்நுட்ப கல்லூரி மற்றும்‌ நாச்சிமுத்து பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடைபெறவுள்ள இத்தனியார்‌ துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பெருமளவில்‌ கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன்‌ அடையலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...