பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

பொள்ளாச்சி, பழனி, மதுரை, நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை மார்ச் 10ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி, பழனி, மதுரை, நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு  - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை  à®®à®¾à®°à¯à®šà¯ 10ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக  à®®à®¤à¯à®°à¯ˆ ரயில்வே கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு - திருச்செந்தூருக்கு இடையே இயக்கப்படும் ரயில் சேவையினை மார்ச் 10 ஆம் தேதி வரை மாற்றம் செய்து மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

இதன்படி, பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:10க்கு புறப்படும்  à®ªà®¾à®²à®•்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில்,(56769)  à®®à®¾à®°à¯à®šà¯ 3, 5, 6, 7 மற்றும் 10ம் தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

அதே போல், à®¤à®¿à®°à¯à®šà¯à®šà¯†à®¨à¯à®¤à¯‚ர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:40 புறப்படும்  à®¤à®¿à®°à¯à®šà¯à®šà¯†à®¨à¯à®¤à¯‚ர் - பாலக்காடு பயணிகள் ( 56770) à®°à®¯à®¿à®²à¯, மார்ச் 3, 5, 6, 7 மற்றும் 10ம் தேதிகளில் திருநெல்வேலி - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 4:05க்கு பதிலாக மாலை 6:45க்கு புறப்படும் எனவும் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. 

மேற்கொண்ட இரண்டு ரயில்களும் மார்ச் 9ம் தேதி முழுமையாக இயங்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...