கோவையில் வரும் மார்ச் 18ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு

கோவை: கோவையில் வரும் மார்ச் 18ம் தேதி வரை எந்தவித போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து கோவை காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கோவையில் வரும் மார்ச் 18ம் தேதி வரை எந்தவித போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து கோவை காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.

கோவை முழுவதும் போராட்டம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்று வருகிறது. இவை தவிர, பல்வேறு பிரச்சனைகளையொட்டி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடக்கிறது. குறிப்பாக, இஸ்லாமிய அமைப்புகள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில், போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை தடை விதித்து கோவை காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;-

தமிழக நகர காவல் சட்டம், 1888 இன் 41 மற்றும் 41-ஏ பிரிவுகளின் துணைப்பிரிவு உட்பிரிவு, 2ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு, கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகள், சாலை, தெருக்கள் ஆகியவற்றில் கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், துண்டுப்பிரசுர விநியோகம், சுவர் சுவரொட்டிகளை ஒட்டுதல், சுவர் எழுத்துக்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி அமைப்பது போன்றவற்றில் ஈடுபட, மார்ச், 18ம் தேதி வரை 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னரே அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த உத்தரவு கீழ்கண்டவற்றிற்கு பொருந்தாது:

i) காவல்துறை ஆணையாளரால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட எந்தவொரு சட்டசபை, ஊர்வலம், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள்.

ii) வழிபாட்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் எந்தவொரு மதக் கூட்டத்தின், கூட்டம் அல்லது ஊர்வலம்.

iii) விளையாட்டுகளில் பங்கேற்க எந்தவொரு சட்டசபை அல்லது ஊர்வலம்.

iv) திருமண, இறுதி சடங்கு அல்லது இதே போன்ற நிகழ்வுகளின் போது ஊர்வலம்.

v) மத விழாவின் போது ஊர்வலம்.

vi) எந்தவொரு பொதுக் கூட்டம் அல்லது சட்டசபை அல்லது பிற வெளிப்படையான சட்ட அதிகாரத்தின் கீழ் நடைபெறும் ஊர்வலம்.

vii) எந்தவொரு பொதுக் கூட்டம், ஊர்வலம், சட்டசபை அல்லது பொதுக் கூட்டத்தின் வர்க்கம் இந்த உத்தரவின் செயல்பாடுகளிலிருந்து மாநில அரசால் பொது அல்லது சிறப்பு உத்தரவின் மூலம் விலக்கு அளிக்கப்படுகிறது.

viii) மாநில அல்லது மத்திய அரசின் அனுசரணையில் நடைபெறும் எந்தவொரு பொதுக் கூட்டம், சட்டசபை அல்லது ஊர்வலம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...