கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளால் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய அமைச்சகம்

கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்றும் சமூக வலைதளங்கள் வழியாக பரவிய வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்றும் சமூக வலைதளங்கள் வழியாக பரவிய வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, கோழி இறைச்சி வழியாக கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்கள் வழியாக பரவிய வதந்தியால் சிக்கன் விற்பனையும் விலையும் சரிந்தது. விலை குறைந்த போதிலும் கொரோனா பரவுவதாக பரவிய வதந்தியால் விற்பனை இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் கோழி முட்டை உற்பத்தி, கறிக்கோழி உற்பத்தி தொழிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் தவறான தகவல்களால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கோழிப்பண்ணை மட்டும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்றும் சமூக வலைதளங்கள் வழியாக பரவிய வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு +91 11 23978046 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...