மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்‌ மக்கள்‌ ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில்‌ மக்கள்‌ ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின்‌ ஒரு முன்னோட்டமாக மக்கள்‌ சுய ஊரடங்கைக்‌ கடைப்பிடிக்க பிரதமர்‌ நரேந்திர மோடி வேண்டுகோள்‌ à®µà¯ˆà®¤à¯à®¤à®¾à®°à¯‌. இதையடுத்து, தமிழகத்தில்‌ ஒரு சில சேவைகளைத்‌ தவிர மற்ற அனைத்தும்‌ இயங்காது என அறிவிக்கப்பட்டது. தமிழகம்‌ முழுவதும்‌ இன்று காலை 7 மணி முதல்‌ இரவு 9 மணி வரை அரசு, தனியார்‌ பேருந்துகள்‌ இயங்காது என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை முதல்‌ நாடு முழுவதும்‌ சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும்‌ சாலைகள்‌ வெறிச்சோடி à®•ாணப்படுகின்றன. இந்நிலையில்‌, தமிழகத்தில்‌ மக்கள்‌ சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள்‌ தாமாகவே முன்‌ வந்து மேற்கொண்ட சுய ஊரடங்கு இன்று இரவு 9 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. இந்த ஊரடங்கு நிகழ்வு மக்களின்‌ நலன்‌ கருதி நாளை காலை 5 மணிவரை தொடரும்‌ என அறிவிக்கப்படுகிறது. எனினும்‌ அத்தியாவசியப்பணிகள்‌ தொடர்ந்து நடைபெற எந்த தடையும்‌ இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...