கொரோனா எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் ரயில் சேவை முழுவதும் முடக்குவது என்றும், கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களை முற்றிலும் முடக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முடக்கப்படும் 75 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் முடக்கப்படுகின்றன. இந்த 3 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டெல்லியில் 7 மாவட்டங்களும், குஜராத்தில், அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 6 மாவட்டங்களும் முற்றிலும் முடக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 5 மாவட்டங்களும், கேரளாவில் 10 மாவட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 3 மாவட்டங்களும் முடக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...