தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு..! - எது செயல்படும்? எது செயல்படாது? இதோ முழு விபரம்..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை 5 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை 5 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது;-

செயல்படாதது;

1. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை

2. அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

3. தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும்.

4. அனைத்து கல்வித் துறைகள், பள்ளிகள் 31 ஆம் தேதி வரை மூடப்படும்.

5. அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.

6. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

7. 1897ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தை போலீசார் கண்டிப்பாக பின்பற்றுவார்கள். குற்றச் செயல்களில் ஈடுபவர்கள் கைது செய்யப்படுவர்.

8. 5 அல்லது 5 நபருக்கு மேல் ஒன்றுகூட கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாடக் கூடாது.

செயல்படுபவை;

1. அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் செயல்படும்

2. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும்.

3. அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

4. அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

5. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.

6. இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரு தடையும் இல்லை.

7. ஒரு வீட்டுக்கு ஒரு குடும்ப உறுப்பினர் தினசரி தேவைகளை வாங்க வெளியேற அனுமதிக்கப்படுவார்.

8. நியாய விலைக் கடைகள் மூலம் தினசரி கூலிக்கு 1 மாதத்திற்கு தேவையான அரிசி, ஒரு நபருக்கு 12 கிலோ இலவசமாக வழங்கப்படும்.

9. அரிசியுடன் ஒரு குடும்பத்திற்கு ரூ.1500 ரொக்கம் வழங்கப்படும்.

9. அங்கன்வாடி மையங்கள் மூடப்படும், அதேசமயம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வீட்டிலேயே ஊட்டச்சத்து வழங்கப்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...