கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைக்கவும் - மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

கோவை: கொரோனா அறிகுறிகள் ஏற்படும் நபர்கள் உடனடியாக 108 சேவை எண்ணுக்கோ அல்லது கோவை மாவட்ட கட்டுப்பாட்டு துறை எண்ணுக்கோ தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கொரோனா அறிகுறிகள் ஏற்படும் நபர்கள் உடனடியாக 108 சேவை எண்ணுக்கோ அல்லது கோவை மாவட்ட கட்டுப்பாட்டு துறை எண்ணுக்கோ தொடர்பு கொண்டு à®¤à®™à¯à®•ளுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், கொரோனோ அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல தற்போது வாகன வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். à®…தேபோல, அறிகுறிகள் தென்படும் பொழுது எப்படி செல்வது எந்த மருத்துவமனையை அணுகுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுடன் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவை எண், மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்களான 1077, மற்றும் 0422-230114 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சை பெறலாம் என கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளான ரமேஷ் குமார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ்குமார் கூறும்போது;-

கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் சுமார் 60 பேர் வரை கொரோனா அச்சத்தில் மருத்துவமனையை அணுகியதில் சுமார் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அறிகுறிகள் மற்றும் சந்தேகங்கள் இல்லாதவர்களுக்கு பரிசோதனைகள் தேவைப்படாது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலம் சென்று திரும்பி வந்தவர்களும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். சந்தேகிக்கும் பட்சத்தில் 108 ஆம்புலன்ஸ் எண், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் ஆகியவற்றிற்கு தொடர்புகொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். இப்படி இந்த பரிசோதனைக்காக நேற்று 8 பேர் வரை 108 ஆம்புலன்ஸ் எண்ணிற்கு அழைத்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்தனர்.

அதேபோல, தனியார் மருத்துவமனைகள் பிஎஸ்ஜி, கேஎம்சிஎச், அபிநந்தன், ராயல்கேர் போன்ற மருத்துவமனைகளும் கொரோனா அவசர உதவிக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து அவர்கள் கண்காணிக்கப்பட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...