கொரோனா சந்தேகங்களை கேட்டறிய பிரத்யேக உதவிமையம் திருப்பூரில் துவக்கம்

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பற்றி சந்தேகங்களை கேட்பதற்காக பிரத்யேக உதவி மையத்தை ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் இன்று தொடங்கிவைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பற்றி சந்தேகங்களை கேட்பதற்காக பிரத்யேக உதவி மையத்தை ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் இன்று தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகிறது. இருந்த போதும் கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் அதிகளவில் ஏற்பட்டு மனதளவில் பெரும் பாதிப்பினை அவர்களுக்கு ஏற்படுத்திவருகிறது.

இந்த சூழலில் கொரோனா வைரஸ் பற்றிய சந்தேகங்கள் மற்றும் என்னவிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதை கேட்டறியும் விதமாக திருப்பூரில் 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக உதவி மையத்தை ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

மேலும் +91-7402026464 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு மக்கள் கொரோனா வைரஸ் பற்றிய சந்தேகத்தினை கேட்டறியலாம் எனவும் ஆட்சியர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...