நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பால் ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து - ரயில்வே துறை அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 14ம்‌ தேதிக்கு பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும்‌ திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்திய ரயில்வே, வரும்‌ ஏப்ரல் 15ம்‌ தேதி முதல்‌ ரயில்‌ பயணச்சீட்டுக்கான முன்பதிவைத்‌ துவங்கியது. அதேசமயம், முன்பதிவு மையங்களில்‌ ஏப்‌.15ம்‌ தேதி காலை முதல்‌ முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து, வரும் மே மாதம் 3ம் தேதி வரை ரயில்‌ சேவைகள்‌ ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதே சமயம், சரக்கு ரயில் சேவை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...