மே 12ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள்;  முதற்கட்டமாக டெல்லி - சென்னை திருவனந்தபுரம் உள்பட 15 தடங்களில் இயக்கம்

மே 12ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள்;  முதற்கட்டமாக டெல்லி - சென்னை திருவனந்தபுரம் உள்பட 15 தடங்களில் இயக்கம்

புது டெல்லி: மே 12ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள் : முதற்கட்டமாக டெல்லி - சென்னை/திருவனந்தபுரம் உள்பட 15 தடங்களில் இயக்கம்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் ரயில் சேவை உள்பட அனைத்து பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக

நாளை மறுநாள் (மே 12) முதல் சிறப்பு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மே 11 மாலை 4 மணிக்கு IRCTC இணைய தளம் மூலம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன்(கோவா), மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர், பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பம் மற்றும்

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதா என உறுதி செய்த பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள், என இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது..

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...