ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல்

கோவை: வரும் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: வரும் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கூறப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை, முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சிறப்பு ரயில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஷார்மிக் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ரயில்வே சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...