கோவை பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம்.

கோவை பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம்.

கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 

பேருந்து நிலையங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக 

வெளியான தகவலையடுத்து

காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் நஞ்சப்பா சாலையிலுள்ள சிறைச்சாலை மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்வரன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது:

உக்கடம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் உக்கடம் லாரிப்பேட்டையில் செயல்பட உள்ளது.மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த வியாபார கடைகள் தடாகம் சாலையிலுள்ள ஜி.சி.டி பொறியியல் கல்லூரி மைதானத்தில் செயல்படவுள்ளது.

மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக தேவாங்கப் பேட்டை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்படவுள்ளதாகமாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார் .

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...