கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி..! தினசரி அடிப்படையில் எந்த பயணத்திற்கும் அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், தினசரி அடிப்படையில் எந்த பயணத்திற்கும் அனுமதி கிடையாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், தினசரி அடிப்படையில் எந்த பயணத்திற்கும் அனுமதி கிடையாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.

ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. துக்க நிகழ்ச்சி, உடன் பிறந்தவர்கள் திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர் செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ள 25 மாவட்டங்களுக்குள் அனுமதிச் சீட்டு இல்லாமல் பயணிப்பது உள்ளிட்ட சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்தும் இ-பாஸ் பெறுவது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி விளக்கமளித்துள்ளார்.

மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி :-

தொழிலாளர்கள் மற்றும் வணிக காரணங்களுக்காக பயணிப்பவர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் மாவட்டத்தில் தங்கி தங்கள் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தினசரி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மாவட்ட சோதனைச் சாவடிகளில், உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும் போது, காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை, திருச்சி போன்ற பிற மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டுமானால், பொதுமக்கள் ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்து, அவர்கள் செல்ல வேண்டிய இடத்தின் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். பயணத்திற்கான அனுமதியின்படி, அவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே நகரத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

வாகனங்களில் பயணம் செய்ய எத்தனை பேருக்கு அனுமதி?

ஓட்டுனர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே கார்களில் அனுமதி உண்டு. ஏழு பேர் வரை வேன்களில் பயணிக்க முடியும். மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

அதேபோல, பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். முக்கியமாக, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...