கடந்த 29 நாட்களில்‌ 258 ஷ்ராமிக்‌ சிறப்பு ரயில்கள்‌ மூலமாக 3.56 லட்சம் பயணிகள்‌ தங்கள்‌ சொந்த ஊருக்கு ஏற்றிச்‌ செல்லப்பட்டுள்ளனர்‌ - தெற்கு ரயில்வே

சென்னை: கடந்த 29 நாட்களில்‌ 258 ஷ்ராமிக்‌ சிறப்பு ரயில்கள்‌ மூலமாக 3.56 லட்சம் பயணிகள்‌ தங்கள்‌ சொந்த ஊருக்கு ஏற்றிச்‌ செல்லப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: கடந்த 29 நாட்களில்‌ 258 ஷ்ராமிக்‌ சிறப்பு ரயில்கள்‌ மூலமாக 3.56 லட்சம் பயணிகள்‌ தங்கள்‌ சொந்த ஊருக்கு ஏற்றிச்‌ செல்லப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பல்வேறு இடங்களில்‌ சிக்கித்‌ தவித்த புலம்‌ பெயர்ந்த தொழிலாளர்கள்‌, யாத்திரிகர்கள்‌, சுற்றுலாப்‌ பயணிகள்‌, மாணவர்கள்‌, இதர நபர்கள்‌ ஆகியோரை சிறப்பு ரயில்கள்‌ மூலம்‌ ஏற்றிச்செல்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்‌ வெளியிட்டிருந்த ஆணையை அடுத்து, இந்திய ரயில்வே கடந்த மே 1ம் தேதி முதல்‌ ஷ்ராமிக்‌ சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் தற்போது வரையிலான காலத்தில்‌ தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து மொத்தம்‌ 258 ஷ்ராமிக்‌ சிறப்பு ரயில்கள்‌ இயக்கப்பட்டதாகவும் இந்த ஷ்‌ராமிக்‌ சிறப்பு ரயில்கள்‌ மூலமாக 3.56 லட்சம் பயணிகள்‌ தங்களது சொந்த

மாநிலங்களுக்கு சென்றடைந்துள்ளனர் என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் கடந்த மே 1ம் தேதி முதல் தற்போது வரை 184 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...