திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை நாளை முதல் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் முகக் கவசம் இன்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவது வருத்தமளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், தென்னம்பாளையம் சந்தை நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் முகக் கவசம் இன்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவது வருத்தமளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், தென்னம்பாளையம் சந்தை நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூர் விளங்கி வருகிறது.

மேலும், திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகவும் விளங்கி வருகிறது இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியதுடன் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூரில் தற்பொழுது பாதிப்பு இல்லை என்றாலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வெளியில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தற்பொழுது பலரும் முககவசம் அணிவதில்லை எனவும் அதுபோன்று முகக்கவசம் அணியாதவர்களை கண்டால் வருத்தமாக உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உருக்கமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், தென்னம்பாளையம் சந்தை நாளை முதல் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதேசமயம், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனையானது தொடர்ந்து நடைபெறும் எனவும் மக்கள்‌ வெளியே செல்வதை தவிர்ப்பதற்காக வீடுகளுக்கே சென்று விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்.ஆர்.ஜி கல்லூரி மற்றும் நஞ்சப்பா பள்ளி மைதானங்களில் புதிய சந்தைகள் அமைக்கப்படும் எனவும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் குடைகளை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...