வரும் 12ம் தேதி முதல் கோவை - அரக்கோணம் இடையே சிறப்பு ரயில்..! முன்பதிவு தொடங்கியது!

கோவை: கோவையில் இருந்து அரக்கோணத்துக்கு 12ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் இருந்து அரக்கோணத்துக்கு 12ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 வழித் தடங்களில் பகல்‌ நேர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

இந்த நிலையில்‌, மேலும்‌ 3 பகல்‌ நேர சிறப்பு ரயில்கள்‌ ஜூன்‌ 12ம்‌ தேதி முதல்‌ இயக்கப்பட உள்ளதாகவும்‌, அதற்கான முன்பதிவு இன்று(ஜூன்‌ 10) முதல்‌ தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்‌ குறிப்பிட்டுள்ளது.

அரக்கோணம்‌ - கோயம்புத்தூர்‌ தினசரி சிறப்பு ரயில்‌ :-

அரக்கோணம்‌ ரயில்‌ நிலையத்தில்‌ இருந்து காலை 7 மணிக்கு புறப்படும்‌ 02675 அரக்கோணம்‌ - கோயம்புத்தூர்‌ சிறப்பு ரயில்‌ பிற்பகல்‌ 2:05க்கு கோயம்புத்தூர்‌ வந்து சேரும்‌. மறுமார்கத்தில்‌ மாலை 3:05க்கு கோயம்புத்தூரில்‌ இருந்து புறப்படும்‌ 02676 கோயம்புத்தூர்‌ - அரக்கோணம்‌ சிறப்பு ரயில்‌ இரவு 10 மணிக்கு அரக்கோணம்‌ சென்றடையும்‌.

இந்த சிறப்பு ரயில்‌ காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்‌, ஈரோடு மற்றும்‌ திருப்பூர்‌ ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ மட்டும்‌ நின்று செல்லும்‌.

திருச்சி - செங்கல்பட்டு தினசரி சிறப்பு ரயில்‌ :-

திருச்சியில்‌ இருந்து காலை 7 மணிக்கு புறப்படும்‌, 02606 திருச்சி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்‌ காலை 11:30க்கு செங்கல்பட்டு சென்றடையும்‌.

மறுமார்கத்தில்‌ செங்கல்பட்டில் இருந்து மாலை 4:45க்கு புறப்படும் 02605 செங்கல்பட்டு - திருச்சி சிறப்பு ரயில்‌ இரவு 9:05க்கு திருச்சி வந்து சேரும்‌.

இந்த சிறப்பு ரயில்‌ அரியலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ மேல்மருவத்தூர்‌ ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ மட்டும்‌ நின்று செல்லும்‌.

செங்கல்பட்டு - திருச்சி தினசரி சிறப்பு ரயில்‌ :-

செங்கல்பட்டு ரயில்‌ நிலையத்தில்‌ இருந்து பிற்பகல்‌ 2 மணிக்கு புறப்படும்‌, 06795 செங்கல்பட்டு - திருச்சி சிறப்பு ரயில்‌ இரவு 8 மணிக்கு திருச்சி சென்றடையும்‌. மறுமார்க்கத்தில் காலை 6:30க்கு திருச்சியில்‌ இருந்து புறப்படும்‌, 06796 திருச்சி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்‌ பகல்‌ 12:40க்கு செங்கல்பட்டு ரயில்‌ நிலையம்‌ வந்து சேரும்‌.

இந்த சிறப்பு ரயில்‌ மேல்மருவத்தூர்‌, விழுப்புரம்‌, திருப்பாதிரிபுலியூர்‌, மயிலாடுதுறை, கும்பகோணம்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ ஆகிய ரயில்‌ நிலையங்களில்‌ மட்டும்‌ நின்று செல்லும்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...