கல்வி மற்றும் புத்தக கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: கல்வி கட்டணம், புத்தக கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.


கோவை: கல்வி கட்டணம், புத்தக கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.

கோவையிலுள்ள தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கல்வி, புத்தக கட்டணங்களை உடனடியாக செலுத்த சொல்லி பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறை, ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்கள் வசூல் செய்வதை கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர்:

கோவை மாவட்டத்திலுள்ள தனியார் சி.பி.எஸ்.சி. மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணங்களை உடனடியாக செலுத்த வற்புறுத்துவதாக பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன்படி பொது முடக்க காலத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணங்கள், கடந்த கல்வியாண்டின் நிலுவைக் கட்டணங்களை செலுத்த வற்புறுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து கல்வி கட்டணம், புத்தக கட்டணங்களை செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்துவது தமிழக அரசின் அரசாணையை மீறி நடக்கும் செயலாகும்.

அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களும், அரசின் ஆணைகளையும் அறிவுரைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக பெறப்படும் புகார்கள் உறுதி செய்யப்படும் நிலையில் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்தார்.

எவ்வித காரணங்களுக்காகவும் பெற்றோர், மாணவர்கள் பள்ளிகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் மாணவர் சேர்க்கை, பள்ளிச் சீறுடைகள், புத்தகம் வழங்குதல் போன்றவைக்கு மறு உத்தரவு வரும் வரையில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள் கீதா, ரமேஷ், சுப்பிரமணி, ராஜலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...