சாத்தான்குளம் விவகாரத்தின் எதிரொலி: தமிழகம் முழுவதும் 2 மாதங்களுக்கு ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த தடைவிதிப்பு

சென்னை: சாத்தான்குளத்தில் விசாரணையின் போது போலீஸ் தாக்கியதில் இறந்த தந்தை மகன் உயிரிழப்பினை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அந்த அமைப்பை எந்த பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை தலைமையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சென்னை: சாத்தான்குளத்தில் விசாரணையின் போது போலீஸ் தாக்கியதில் இறந்த தந்தை மகன் உயிரிழப்பினை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அந்த அமைப்பை எந்த பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை தலைமையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கினை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை - மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அவர்களை தாக்கியதில். à®ªà¯à®°à¯†à®£à¯à®Ÿà¯à®¸à¯ ஆப் போலீசாரும் அடங்குவர் என்ற உண்மை வெளிவந்துள்ள நிலையில், அந்த அமைப்பினர் பல அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதை தொடர்ந்து, தற்போது ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை இனி வரும் இரண்டு மாதங்களுக்கு பணிக்கும் பயன்படுத்தக்கூடாது எனமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களை காவல்நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கே பயன்படுத்த கூடாது எனவும், அதோடு மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் எந்தவித சமூக பணிகளுக்கும் பயன்படுத்த கூடாது என காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...