சமூக பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பெறப்படும் விண்ணப்பங்கள்‌ இனி இ-சேவை மையங்கள்‌ மூலம்‌ மட்டுமே பெறப்படும் என அறிவிப்பு

கோவை: சமூக பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து திட்டங்களுக்குரிய விண்ணப்பங்கள்‌ பொது மக்களிடமிருந்து நேரடியாக அந்தந்த சமூக பாதுகாப்புத்‌ திட்ட தனிவட்டாட்சியர்களால்‌ பெறப்பட்டு வந்தது.

கோவை: சமூக பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து திட்டங்களுக்குரிய விண்ணப்பங்கள்‌ பொது மக்களிடமிருந்து நேரடியாக அந்தந்த சமூக பாதுகாப்புத்‌ திட்ட தனிவட்டாட்சியர்களால்‌ பெறப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌ கீழ்க்கண்ட எட்டு திட்டங்களுக்குரிய விண்ணப்பங்கள்‌ இ-சேவை மையங்கள்‌ மூலம்‌ மட்டுமே இனி பெறப்பட வேண்டும்‌ என அரசால்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1. இந்திரா காந்தி முதியோர்‌ ஒய்வூதிய தேசிய திட்டம்‌

2. இந்திரா காந்தி விதவைகள்‌ ஒய்வூதிய தேசிய திட்டம்‌

3. ஆதரவற்ற விதவைகள்‌ ஓய்வூதியத்திட்டம்‌

4. ஆதரவற்ற / கணவரால்‌ கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத்‌ திட்டம்‌

5. 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத்‌ திட்டம்‌

6. முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்திட்டம்‌

7. இந்திரா காந்தி மாற்றுத்‌ திறனுடையோர்‌ ஓய்வூதிய தேசிய திட்டம்‌

8. ஆதரவற்ற மாற்றுத்‌ திறனுடையோர்‌ ஓய்வூதியத்‌ திட்டம்‌

எனவே, இனி வரும்‌ காலங்களில்‌ தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்‌ இத்திட்டங்களின்‌ கீழ்‌ பயன்பெற இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்யுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...