கோவையில் குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் பயன்படுத்தும் வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க, மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரங்க பன்னாடி வீதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், குடிநீர்‌ விநியோக குழாய்களிலிருந்து முறைகேடாக மின்மோட்டார்‌ பயன்படுத்தி குடிநீர் எடுக்கப்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார்.

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரங்க பன்னாடி வீதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், குடிநீர்‌ விநியோக குழாய்களிலிருந்து முறைகேடாக மின்மோட்டார்‌ பயன்படுத்தி குடிநீர் எடுக்கப்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.95 ரங்க பன்னாடி வீதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வின் போது, அப்பகுதியிலுள்ள வீடுகளில்‌ குடிநீர்‌ விநியோக குழாய்களிலிருந்து முறைகேடாக மின்மோட்டார்‌ பயன்படுத்தி குடிநீர் எடுக்கப்பட்டு வருவதை கண்டறிந்தார்‌.

இதையடுத்து, மின்மோட்டார்களை பறிமுதல்‌ செய்து, குடிநீர் இணைப்பை துண்டித்து, காவல்துறையில்‌ வழக்கு பதிவு செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும்‌, இதுபோன்ற முறைகேடுகளில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்க மாநகராட்சி குடிநீர் பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...