கோவையில் இருந்து டெல்லிக்கு நாளை முதல் சிறப்பு சரக்கு ரயில் இயக்கம்

கோவை: கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி படேல் நகருக்கு நாளை முதல் (ஆகஸ்ட் 29ம் தேதி) சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்படுவதாக, சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி படேல் நகருக்கு நாளை முதல் (ஆகஸ்ட் 29ம் தேதி) சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்படுவதாக, சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருள்கள், மருந்துகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக, ஏப்ரல் 9ம் தேதி முதல் சிறப்பு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கேரள மாநிலம், எர்ணாக்குளத்தில் இருந்து கோவை வழித்தடத்தில், சென்னைக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாள்கள் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, படேல் நகருக்கு நாளை முதல் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ரேனிகுண்டா, நாக்பூர் வழியாக திங்கள்கிழமை இரவு டெல்லி படேல் நகரை சென்று அடையும்.

பின்பு, அங்கிருந்து, புதன்கிழமை காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், வெள்ளிக்கிழமை மாலை, வடகோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலின் முதல் சேவையானது, நாளை காலை 10 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் துவங்குகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...