ஆழியார், டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, விரைவில் அனுமதி..!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார், டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, விரைவில் அனுமதி வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார், டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஆழியார் அணை, பூங்கா, குரங்கு அருவி மற்றும் டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அதிகம் வந்து செல்வது வழக்கம். 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாத காலமாக ஆழியார், டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகளில், தென்மேற்கு பருவமழை பெய்து வனப்பகுதிகள் பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி அளித்து வந்த நிலையில், இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்து வந்தனர். 

இந்நிலையில், தமிழக அரசுசெப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வுகள் அறிவித்தது. இதனால், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டாப்சிலிப் , ஆழியார், குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கில் தமிழக அரசு தளர்வு ஏற்படுத்தி உள்ளதால், கோவை மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் சுற்றுலா பயணிகள் செல்ல விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், வால்பாறை, அட்டகட்டி பகுதியில் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை செல்லும் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேட்கொள்ளப்பட்டும், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை, ஆழியார், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதனியார் விடுதிகள்,ரிசார்ட்களில், உள் மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்,வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வராததால், பொதுமக்கள் சுற்றுலா செல்ல தடை நீடித்து வருகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...