கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற கற்றல்‌ வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்‌ ரூபாய் 7000 முதல் 40,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு..!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற கற்றல்‌ வேலை வாய்ப்பு திட்டத்தின்‌ மூலம்‌ புதிய பட்டதாரிகள்‌ பணி புரியும்‌ வகையில்‌ ஓர்‌ அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது, என மாநகராட்சி ஆணையர், குமரவேல் பாண்டியன், செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற கற்றல்‌ வேலை வாய்ப்பு திட்டத்தின்‌ மூலம்‌ புதிய பட்டதாரிகள்‌ பணி புரியும்‌ வகையில்‌ ஓர்‌ அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது, என மாநகராட்சி ஆணையர், குமரவேல் பாண்டியன், செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகாப்புற அலுவல்‌ அமைச்சகம்‌ (MOHUA) மற்றும்‌ அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்‌ (AICTE) ஆகியவற்றுக்கும்‌ இடையிலான, ஒரு கூட்டு முயற்சியாகும்‌. TULIP திட்டத்தின்கீழ்‌ புதிய பட்டதாரிகள்‌ தன்னம்பிக்கை பெறுவதற்கும்,‌ மாநகராட்சிக்கு புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும்,‌ அரிதான வாயப்பினை அளிக்க, கோவை மாநகராட்சி முன்வந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்‌ பயன்பெற, செய்ய வேண்டியவை:

1. விண்ணப்பதாரர்கள்‌ கடந்த 18 மாதங்களுக்குள்‌ பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

2. இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம்‌ அதிக பட்சம்‌ ஒரு வருடம்‌ ஆகும்‌.

உதவித்தொகை:

* பி.ஏ., பி.எஸ்‌.சி., பட்டதாரிகளுக்கு ரூ.7000/-

* பொறியியல்‌ பட்டதாரிகளுக்கு ரூ.10,000/-

* மருத்துவா்களுக்கு ரூ.40,000/-

* செவிலியாகளுக்கு ரூ.12,000/-, என உதவித்தொகை வழங்கப்படும்‌.

3. மாநகராட்சியின்‌ பணி சூழல்‌ பட்டதாரிகளுக்கு சவாலான தளமாகும்‌. இது அவர்களை அடுத்த நிலைக்கு தயாராக்குகிறது.

4. தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு இந்தியா முழுவதிலும்‌ உள்ள வாய்ப்புகளை ஓரே மேடையில்‌ ஒருங்கிணைத்து, நகர்ப்புற நிர்வாகத்தில் விண்ணப்பிக்க இத்திட்டம்‌ அனுமதிக்கிறது.

5. ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2020, ஆகும். இணைய வலைத்தளம்‌ http://internship.aicte-india.org மூலமும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மருத்துவர்களுக்கு15 பணியிடங்களும்‌, செவிலியர்‌ பணிக்கு 100 பணியிடங்களும்‌, சுகாதார ஆய்வாளர்‌ பணிக்கு 50 பணியிடங்களும்‌ உள்ளன.

மேலும்‌, ஓவ்வொரு பிரிவிலும்‌ உள்ள பயிற்சிக்கால காலி பணியிட விவரங்களை இணையதளத்தில்‌ அறியலாம்‌.

ஆர்வமுள்ள அனைத்து தகுதி வாய்ந்தவர்கள், விண்ணப்பிக்கலாம்‌ என மாநகராட்சி நிர்வாகத்தால்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...