கோவையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கம்: விற்பனை இலக்காக ரூ.6.78 கோடி இலக்கு நிர்ணயம்

கோவை: கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நேற்று கோவை வ.உ.சி பூங்கா அருகே உள்ள மருதம் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குத்து விளக்கேற்றி, இன்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.


கோவை: கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நேற்று கோவை வ.உ.சி பூங்கா அருகே உள்ள மருதம் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குத்து விளக்கேற்றி, இன்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.



தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள். துண்டு ரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள், மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் போன்றவை கோவை மாவட்டத்தில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு, கோவை மாவட்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை இலக்காக ரூ.6 கோடியே 78 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் வெங்கடாசலம், மண்டல மேலாளர் அருள்ராஜன், மருதம் விற்பனை நிலைய மேலாளர் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...