சென்னை - கோவை இடையே வழக்கமான நேரத்தில் ரயில் புறப்படும் - தெற்கு ரயில்வே

கோவை: சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும், கோவை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை: சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும், கோவை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் - ஜோலார்பேட்டை ரயில் பாதை பிரிவில், தொட்டம்பட்டி - தாசம்பட்டி இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், நேரம் மாற்றப்பட்டு, இன்று மாலை, 4 மணிக்கும், கோவையில் இருந்து, சென்னைக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நேரம் மாற்றி, மாலை, 3:35 மணிக்கும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொட்டம்பட்டி - தாசம்பட்டி இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் அதிவிரைவு ரயில் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...