பொள்ளாச்சியில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு நவம்பர் மாதம் முதல் இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்பு!

கோவை: கோவை பொள்ளாச்சியில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் முதல் நடத்தப்படுகிறது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் முதல் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு, குழுமம் இரண்டாம் நிலை, காவலர் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் என மொத்தம் 10,908 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மனுதாரர்கள், தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகமும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் இணையதளம் வழியாக (Zoom Meet) நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் ஆகியவை வாட்ஸ் அப் செயலியில் பகிரப்படும். மேலும், வாரம்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து வகை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஜாதி, கல்வி தகுதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பப் படிவங்கள் உடன் 9842318081 என்ற எண்ணுக்கும் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி, பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல, இத்தேர்வு குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் பார்வையிட்டு தேவையான தகவல்களை திரட்டி தேர்வுக்கு தயார் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின், பொள்ளாச்சி கோபாலபுரம் வீதியிலுள்ள பொறியாளர் சங்க கட்டிடத்தில் வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...