நெல்லையில் இருந்து திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு வழியாக பாரத தரிசன ரயில் இயக்கம்!

கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும்‌ சுற்றுலா கழகம்‌ (ஐ.ஆர்‌.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில்‌ திட்டத்தில்‌, சுற்றுலா மற்றும்‌ ஆன்மிக முக்கியத்துவம்‌ வாய்ந்த தலங்களுக்கு மக்களை அழைத்துச் செல்கிறது.


கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும்‌ சுற்றுலா கழகம்‌ (ஐ.ஆர்‌.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில்‌ திட்டத்தில்‌, சுற்றுலா மற்றும்‌ ஆன்மிக முக்கியத்துவம்‌ வாய்ந்த தலங்களுக்கு மக்களை அழைத்துச் செல்கிறது.

இந்நிலையில்‌, வருகின்ற டிசம்பர்‌ 20ம்‌ தேதி திருநெல்வேலியில்‌ இருந்து பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில்‌ இயக்கப்படுகிறது.

இந்த ரயில்‌ நாகர்கோவில்‌, திருவனந்தபுரம்‌, கொல்லம்‌, கோட்டயம்‌, எர்ணாகுளம்‌, பாலக்காடு, போத்தனூர்‌, ஈரோடு, சேலம்‌ வழியாக குவாலியர் நகரின்‌ அழகிய கோட்டைகளுக்கு அழைத்துச் செல்கிறது.

மேலும்‌, உலகப்புகழ்‌ பெற்ற கஜூராஹோ சிற்பங்கள்‌, ஜான்சியில்‌ உள்ள கோட்டை மற்றும்‌ கோவில்கள்‌, விதிஷாவில்‌ உள்ள சாஞ்சி ஸ்தூபி, ஹலாலி டேம், போபாலில்‌ பிம்பேட்கா குகை, போஜ்பூர்‌ சிவாலயம்‌ என பல இடங்களை இந்த ரயில்‌ மூலம்‌ சுற்றி பார்க்கலாம். 10 நாட்கள்‌ கொண்ட யாத்திரைக்கு, 10 ஆயிரத்து, 200 ரூபாய்‌ கட்டணம்‌ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல்‌ விபரங்கள்‌ மற்றும்‌ முன்பதிவுக்கு கோவை ஐ.ஆர்‌.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655 மற்றும்‌ 82879 31965 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்‌ என ஐ.ஆர்‌.சி.டி.சி அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...