சிறப்பு முகாம்கள் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உள்ளதாக, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை: சிறப்பு முகாம்கள் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உள்ளதாக, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


சென்னை: சிறப்பு முகாம்கள் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உள்ளதாக, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மாநில சமூக நலத்துறையின் கணக்கீட்டின் படி, தமிழகத்தில் 84,718 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 74,054 பாலியல் தொழிலாளர்கள், அரசின் நியாயவிலைக் கடைகள் மூலம் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயன் பெறுகின்றனர்.

தற்போது நிலவி வரும், கொரோனா பரவல் காரணமாக, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவோர், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்களின் உணவு தேவைகளை பாதுகாக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.

இதையடுத்து, தமிழ்நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, குடும்ப அட்டைகள் இல்லாத 10,664 பேரை கண்டறிந்து அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

குடும்ப அட்டைகள் வழங்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும், மாநில அரசின் சமூக நலத்துறை, உணவுத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகளை மேற்கொள்ளபட உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டைகள் வழங்குவதன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும், என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...