கோவையில் கொடிசியா தவிர்த்து, கல்வி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூட திட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவையில் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.



கோவை: கோவையில் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடிசியா, சித்தாப்புதூர், அன்னூர், துடியலூர், கருமத்தம்பட்டி, காளப்பட்டி ஆகிய இடங்களில் 5 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு என்ணிக்கையும் 300க்கு கீழ் குறைந்துள்ளது. இதனால், கொடிசியா தவிர மற்ற கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.




இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர், கு ராஜாமணி கூறியதாவது: 

கோவையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது, மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதில், கொரோனா சிகிச்சை மையங்களில் வெறும் 500 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொடிசியா மையத்தில் மட்டும் 1,128 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு வெறும் 234 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதம் உள்ள, 894 படுக்கைகள் காலியாகவுள்ளன. 

இதனால், கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள அறிகுறி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் படுபவர்களுக்கு அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, கொடிசியாவில் மட்டுமே அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொடிசியாவில் ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாகவும், கலந்தும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கொரோனா சிகிச்சை மையங்களில் பணிபுரிவதுக்கு தேவையான பணியாளர்களின் தேவையும் குறைகிறது. 

குறிப்பாக, காளப்பட்டியில் பெண்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையமும் தற்காலிகமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில், தேவைபட்டால் கொரோனா சிகிச்சை மையங்கள் மீண்டும் தொடங்கப்படும், இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...