இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி தேதி..!

கோவை: இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 19ம் தேதி வரை புதுச்சேரி, இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு நடைபெறும்.

கோவை: இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 19ம் தேதி வரை புதுச்சேரி, இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு நடைபெறும். 

இதன் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) 17.01.2000க்குப் பின்னரும் 30.12.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். 

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்து இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த விவரத்தினை நேரிலோ அல்லது 9842318081 என்ற வாட்ஸ்அப் செயலி வாயிலாகவோ கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இவ்வாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...