மண்டல வாரியாக புகார்களை தெரிவிக்க கோவை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு..!

கோவை: கோவை மாநகராட்சியின் நிர்வாக நலனுக்காகவும்‌, மக்களுக்கு வழங்கும்‌ சேவையினை உடனடியாக வழங்கிடவும்‌, தற்பொழுது கட்டுப்பாட்டு அறைகள்‌, தலைமை அலுவலகம்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ ஒவ்வொரு மண்டலத்திலும்‌ செயல்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகராட்சியின் நிர்வாக நலனுக்காகவும்‌, மக்களுக்கு வழங்கும்‌ சேவையினை உடனடியாக வழங்கிடவும்‌, தற்பொழுது கட்டுப்பாட்டு அறைகள்‌, தலைமை அலுவலகம்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ ஒவ்வொரு மண்டலத்திலும்‌ செயல்பட்டு வருகின்றன.

அன்றாடம்‌ பொது மக்களுக்கு ஏற்படும்‌ குறைபாடுகளை இந்தக்‌ கட்டுப்பாட்டு அறைகளுக்கு புகார்களாக தெரிவிக்கலாம்‌. குடிநீர் விநியோகம்‌, கழிவுநீர்‌ அகற்றுதல்‌, குப்பை அகற்றுதல்‌, சாலை செப்பணிடுதல்‌, மின்விளக்கு பழுதுகள்‌, ஆபத்தான மரங்கள்‌ மற்றும்‌ கட்டிடங்கள்‌, சாலையில்‌ மழைநீர்‌ தேங்குதல்‌ போன்ற புகார்களை இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கலாம்‌.

தற்பொழுது, வடகிழக்கு பருவ மழைக்‌ காலத்தில்‌ ஏற்படும்‌ நீர் தேங்கும் பிரச்சினை, கழிவு நீர் கால்வாய்‌ அடைப்பு மற்றும்‌ ஆபத்தான நிலையில்‌ உள்ள மரங்கள்‌ தொடர்புடைய புகைப்படங்களை, புகார்களாக மாநகராட்சியின்‌ வாட்ஸப்‌ எண்ணிற்கு அனுப்பலாம்,‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்துள்ளார்.

கீழே உள்ள எண்களில் உள்ள மண்டல அலுவலகங்களை பொது மக்கள் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌-0422-2302323.

மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌-0422-2215618.

கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌-0422-2595950.

மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌-0422-2551800.

வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌-0422-2243133.

தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌-0422-2252705.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை வாட்ஸப்‌ கைபேசி எண்‌-8190000200.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...