கோவை மாநகராட்சியில் இதுவரை ரூ.84 கோடி சொத்து வரி வசூல் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் இதுவரை ரூ. 84 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் இதுவரை ரூ. 84 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மாநகரப் பகுதிகளில் வரி வசூலிக்கும் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் மாநகரில் சொத்து வரி வசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிகள், சமூக நலக் கூடங்கள் என மக்கள், சொத்து வரி செலுத்த எளிதாக 29 வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே, மாநகரப் பகுதிகளில் அதிகளவில் வரி செலுத்தாத நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களின் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் நிலுவை உள்ள வரிகள் வசூலாகி வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சியில் 2020-21ம் நிதியாண்டுக்கான மொத்த சொத்து வரித் தொகையான ரூ.169 கோடியில், தற்போது வரை ரூ.84 கோடி வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.85 கோடி நிலுவை வரியை 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடப்பு நிதியாண்டுக்குள் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...