பாதாளச் சாக்கடை குழாய் பதிக்க 15-ம் தேதி மக்களிடம் கருத்துக் கேட்பு - கோவை மாநகராட்சி அறிவிப்பு..!

கோவை: பாதாளச் சாக்கடை குழாய் பதிக்க, வரும் 15-ல் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது, என மாநகராட்சி அறிவித்துள்ளது. கோவை மாநகராட்சி சார்பில், பெருவாரியான பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ளது.

கோவை: பாதாளச் சாக்கடை குழாய் பதிக்க, வரும் 15-ல் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது, என மாநகராட்சி அறிவித்துள்ளது. கோவை மாநகராட்சி சார்பில், பெருவாரியான பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ளது. 

இதில், விடுப்பட்ட இடங்களான சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் மற்றும் பீலமேடு பகுதிகளிலும் புதிதாக சேர்க்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இது தொடர்பாக, சரவணம்பட்டி, துடியலூர் பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், துடியலூர் எஸ். எஸ் கமலேஷ் கல்யாண மண்டபத்தில் வரும் 15-ம் தேதி காலை 10 மணி முதல் 11. 30 மணி வரையும், வடவள்ளி, வீரகேரளம் மக்களிடம் குறை கேட்கும் கூட்டம் கல்வீரம்பாளையம், கே.சி கல்யாண மண்டபத்தில் அன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், சிங்காநல்லூர் ஒன்டிபுதூர் மற்றும் பீலமேடு பகுதிக்கான கூட்டம் மனிஷ் தியேட்டர் அருகில் உள்ள மணி ஹாலில் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம், என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...