கோவை மாவட்டத்தில் புதியதாக சுமார் 8500 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் - மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் புதியதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளவர்களில், சுமார் 8500 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் புதியதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளவர்களில், சுமார் 8500 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1440 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதனிடையே, இதுவரை ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதியதாக ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

அதன்படி, விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் இதுவரை சுமார் 9000 பேர் புதியதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இதுவரை சுமார் 8500 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் ஊழியர்கள் மூலமாக ஸ்மார்ட் கார்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...