திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கோவை மாநகராட்சி: மக்களிடம் கருத்து கேட்கிறது!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம்‌ தேதி முதல்‌ திறந்த வெளி கழிப்பிடமற்ற மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து அத்தகைய நிலையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம்‌ தேதி முதல்‌ திறந்த வெளி கழிப்பிடமற்ற மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து அத்தகைய நிலையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதன்‌ அடுத்த நிலை சான்று பெறுவதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப் பகுதியில்‌ திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தலற்ற நிலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சிப் பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ கருத்துகள்‌ மற்றும்‌ ஆட்சேபனைகள்‌ ஏதும்‌ இருப்பின்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலருக்கு எழுத்து மூலமாகவோ [email protected] என்ற மின்னஞ்சல்‌ மூலமோ 15 தினங்களுக்குள்‌

தெரிவிக்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்‌ கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...