கொரோனா தடுப்பூசி பதப்படுத்த மூன்று குளிர்சாதன அறைகள் தயார்: சுகாதாரத்துறை தகவல்!

கோவை: கொரோனா தடுப்பூசிகளைப் பதப்படுத்துவதற்காக கோவையில் மூன்று குளிர்பதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கொரோனா தடுப்பூசிகளைப் பதப்படுத்துவதற்காக கோவையில் மூன்று குளிர்பதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில் இந்தியாவுக்கு விரைவில் தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் தடுப்பூசிகளை முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்குச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டமாக கோவை மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டால் அதனை பதப்படுத்துவதற்கு கோவையில் தேவையான குளிர்பதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறியதாவது:-

தடுப்பூசி தயாரானதும் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும். தொடர்ந்து திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இங்கிருந்து தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். இந்த தடுப்பூசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர் களுக்கும் செலுத்தப்படும்.

ஏற்கனவே இரண்டு குளிர்பதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக ஒரு அறை என மொத்தம் மூன்று அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டதும், முன் களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், போலீஸ், அங்கன்வாடி பணியாளர்கள் என 60 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கும் நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...