திருப்பூரில் தேசிய இளைஞர்கள் தின விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!

திருப்பூர்: திருப்பூரில் தேசிய இளைஞர்கள் தின விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் தேசிய இளைஞர்கள் தின விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை மத்திய அரசின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் இளைஞர்கள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் முறையில் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் டிச.,29 மற்றும் 30ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டி ஜன.,5 முதல் 8 வரை நடை பெறுகிறது. தமிழக இளைஞர்கள் தங்களின் தனித்திறன் போட்டிகள், குழு போட்டிகளில் பங்கேற்கலாம்.

15 வயது முதல் 29 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவரல்லாதவர்கள் கூட பங்கேற்கலாம். இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு போன்றவைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நல்ல தெளிவான ஒலி, ஒளி அமைப்புடன் வீடியோ பதிவு செய்ய வேண்டும். உறுதி மொழி படிவம், வயது சான்றிதழ் ஆகியவற்றையும் வீடியோவுடன் இணைக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இப்போட்டியில் பங்கேற்க முடியும். வரும் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணி வரை வரும் வீடியோக்கள் மட்டுமே ஏற்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 74017 03515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...