ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பாக வங்கி விவரம் கேட்போரிடம் ஏமாறாதீர்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

கோவை: இணையதளத்தில் முன்பதிவு செய்த ரயில் பயணச் சீட்டை ரத்து செய்வதற்காக வங்கி விவரங்களை கேட்கும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.


கோவை: இணையதளத்தில் முன்பதிவு செய்த ரயில் பயணச் சீட்டை ரத்து செய்வதற்காக வங்கி விவரங்களை கேட்கும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 3,400 -க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் ரயிலில் பயணிக்க இணையத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு இணையம் வழியாகவே பயணச்சீட்டு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்த அந்தந்த ரயில் நிலையங்களில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டு முன்பதிவு ரத்துக் கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இணையத்தின் மூலம் முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்வதற்கு ரயில்வே அதிகாரிகள் எனக் கூறி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் வங்கி விவரங்கள் ஏ.டி.எம் கார்டு பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது:-

இணையதளம் மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளிலேயே பயணச் சீட்டு ரத்து கட்டணங்களும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ரயில்வே அதிகாரி எனக் கூறி பயணிகளிடம் சிலர் டெபிட், கிரெடிட் கார்டு எண்கள், சிவிவி எண்கள், ஓ.டி.பி, ஏ.டி.எம் பாஸ்வேர்டு, பான் கார்டு, எண், பிறந்த தேதி மற்றும் வங்கி விவரங்களை கேட்பதாக ரயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இவ்வாறாக விவரங்கள் கேட்கும் நபர்களிடம் தங்களின் வங்கி மற்றும் பண பரிமாற்றத்துக்கான ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம். இது தொடர்பாக 138 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பயணிகள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...