அரசின் நலத்திட்ட உதவிகளை பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

கோவை: அரசின் நலத்திட்ட விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், என் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.



கோவை: அரசின் நலத்திட்ட விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், என் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம், ஓட்டுநர் நல வாரியம் என மொத்தம் 17 நல வாரியங்கள் உள்ளன. இதில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், அரசின் நலத்திட்டஉதவிகளை பெற https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர், தொழிலாளர்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அதன் விவரங்கள் அனுப்பப்படும். விண்ணப்பம் சரியாக இருப்பின், உரிய அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு நிரந்தர பதிவு எண் வழங்கப்படும். நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல், ஆகியவை பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன் மூலமாக பதிவுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...