கோவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம், 18-ம் தேதி தொடங்குகிறது: 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு!

கோவை: கோவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இதில் 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இதில் 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் வருகிற 18-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர் (ஆள்சேர்ப்பு) கர்னல் ராபர்ட், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம் மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டத்தில் இருந்து ஆட்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு இணையம் வழியாக ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுச்சீட்டு 1-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

நுழைவுச்சீட்டு கொண்டுவரும் தேர்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிக அளவிலான நபர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 500 பேர் கொண்ட குழுவாக நான்கு வெவ்வேறு இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள். முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தனியாக முகாம் டோக்கன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதன்மூலம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற உள்ள உள்ளது. விண்ணப்பதாரர்கள் யாரும் வேலை பெற்றுத் தருவதாகக்கூறி மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியின் அடிப்படையில்தான் இந்த தேர்வு நடைபெறும். எனவே இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராசாமணி கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...