பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில் பிப்ரவரி 16-ந்தேதி புறப்படும்!

கோவை: நாய்கள் கடித்ததால் காயமடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை: பாரத தரிசனம் சுற்றுலா ரயில் பிப்ரவரி 16-ம் தேதி புறப்படும் என்றும், பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் கடந்த டிசம்பர் 20 -ந்தேதி திருநெல்வேலியில் இருந்து பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. குளிர்காலம் காரணமாக தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் வரும் பிப்ரவரி 16-ந்தேதி புறப்படுகிறது. மதுரையிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வழியாகச் செல்லும் வகையில் இயக்கம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, போத்தனூர், ஈரோடு, சேலம் வழியாக குவாலியர் செல்கிறது. அங்குள்ள கோட்டைக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். மேலும் உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ சிற்பங்கள், ஜான்சி கோட்டை, விதிஷா சாஞ்சி ஸ்தூபி, ஹலாலி டேம், போபாலிம் பிம்பேட்கா குகைமற்றும் போஜ்பூர் சிவாலயம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

10 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு 10,200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு கோவை ஐ.ஆர்.சி.டி.சி அலுவலகத்தை 9003140655 - 82879 31965 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...