நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் காலவரையின்றி ஒத்திவைப்பு!

கோவை: நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.


கோவை: நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அண்மையில் சென்னை வந்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியானது ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்தது.

இதனால் போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...