இன்று கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோணா தடுப்பூசி முகாம்

கோவை: இன்று கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோணா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தினமும் ஒரு மையத்தில் 100 பேர் வீதம் நான்கு மையங்களில் 400 பேருக்கும் தடுப்பூசி போடப்படும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் வடிவேலன், தெரிவித்துள்ளார்.


கோவை: இன்று கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோணா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தினமும் ஒரு மையத்தில் 100 பேர் வீதம் நான்கு மையங்களில் 400 பேருக்கும் தடுப்பூசி போடப்படும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் வடிவேலன், தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி, அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம், மற்றும் நல்லட்டிபாளையம் ஆகிய 4 இடங்களிலும் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் தொடங்கவுள்ள தடுப்பூசி முகாமில், இன்று முதல் பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

பூனேயில் இருந்து விமானம் மூலம் 5.36 லட்சம் கோவிட் ஷூல்டு தடுப்பூசி சென்னை வந்தடைந்தது. பின்னர், சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 73 ஆயிரத்து 200 தடுப்பூசி மருந்துகள் சிறப்பு வாகனம் மூலம் கோவை வந்தது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு தடுப்பூசி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று 10 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நிர்வாக காரணங்களினால், அவை 4 மையங்களாக குறைக்கப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி போடும் பணிகள் இன்று நடக்க உள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வடிவேலன், கோவையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறுகையில் நிர்வாக காரணமாக தடுப்பூசி போடும் மையங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு மையத்தில் 100 பேர் வீதம் நான்கு மையங்களில் 400 பேருக்கும் தடுப்பூசி போடப்படும், என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...