கோவையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

கோவை: கோவையிலிருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இன்று முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு இரயிலுக்குக்கான, முன்பதிவு நேற்று, வெள்ளிக்கிழமை முதல் துவக்கப்பட்டது.


கோவை: கோவையிலிருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இன்று முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு இரயிலுக்குக்கான, முன்பதிவு நேற்று, வெள்ளிக்கிழமை முதல்

துவக்கப்பட்டது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவையிலிருந்து ஜபல்பூர் இடையே இன்று முதல் 27-ஆம் தேதி வரை விழாக்கால வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இன்று முதல் ஜபல்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், அங்கிருந்து சனிக்கிழமை இரவு 11மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 4.05 மணிக்கு கோவை வந்தடையும்.

மறுமார்க்கமாக, கோவையிலிருந்து 18 -ஆம் தேதி முதல் மார்ச் 29 -ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில், மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு புதன் கிழமைகளில் காலை 8 மணிக்கு ஜபல்பூர்ரயில் நிலையத்தை சென்றடையும், வாராந்திர சிறப்பு ரயில்கள் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூர். உடுப்பி, குண்டபுர, கங்கவல்லி, ரத்தனகிரி, நாசிக், நரசிங்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...