மருதமலை முருகன் கோவில் தேரோட்டம் ரத்து: தைப்பூச விழாவுக்காக நாளை கொடியேற்றம்!

கோவை: தைப்பூசத் திருவிழாவுக்கு நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: தைப்பூசத் திருவிழாவுக்கு நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது, `கோவையில் முருகனின் 7-வது படைவீடு என பக்தர்களால் அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடம்தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28 -ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது' என்றனர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்அறநிலையத் துறை துணை ஆணையர் (பொறுப்பு) விமலா கூறும்போது, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று இரவு வாஸ்து சாந்தி மற்றும் விநாயகர் பூஜையுடன் தைப்பூச திருவிழா தொடங்குகிறது. நாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. 28 -ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் வீதியுலா வருகிறார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி மாலை முதல் 28 -ஆம் தேதி காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 28 -ஆம் தேதி காலை 7 மணிக்கு பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள்' என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...