கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்க திட்டம் - மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவையில் காது கேளாத, கண் பாா்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு செல்ஃபோன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் காது கேளாத, கண் பாா்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு செல்ஃபோன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கோ.வசந்தராம்குமாா் கூறியதாவது:

காது கேளாத மற்றும் கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளில் பட்டப்படிப்பு படித்தவா்கள், வேலைக்கு செல்பவா்கள், சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு பயன்படும் விதமாக ஆண்ட்ராய்டு செல்ஃபோன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காது கேளாதவா்கள் ஆண்ட்ராய்டு செல்ஃபோன் மூலம் வீடியோ கால் செய்து கொள்ளலாம். அதேபோல, கண் பார்வையற்றவா்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் செல்ஃபோன் கண் பாா்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். கோவையில் இது தொடர்பான பட்டியல் தயாா் செய்யப்பட்டு வருகிறது.

ஆகையால், தகுதியானவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார். இதன் காரணமாக அவர்கள் எளிதில் தொழில் விஷயமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அவர்கள் எளிமையான முறையில் தகவல் தொடர்பை பரிமாறி தங்கள் தொழிலை மேலும் உயர்த்த இது பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...