கோவையில் 31-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்; 1.64 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!

கோவை: கோவையில் வருகிற 31-ஆம் தேதி ஒரு லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் வருகிற 31-ஆம் தேதி ஒரு லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளம்பிள்ளைவாத்தை ஒழிக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 31-ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடக்கவுள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார நிலையங்கள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ரோட்டரி கிளப் நடத்தும் முகாம்கள் என மொத்தம் 346 இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் 5 சிறப்பு முகாம் மற்றும் மூன்று நடமாடும் மையங்கள் செயல்பட உள்ளது. மருத்துவத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், ரோட்டரி கிளப்பினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

31-ஆம் தேதி நடக்க உள்ள முகாம்களில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 251 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...