ஜனாதிபதி கையால் வழங்கும் பெண் சக்தி விருது. விண்ணப்பிக்க வரும் 6-ந் தேதி வரை கால அவகாசம்!

கோவை: ஜனாதிபதி கையால் வழங்கப்படும் பெண் சக்தி விருதினைப் பெற வரும் 6-ந் தேதி வரை விண்ணப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஜனாதிபதி கையால் வழங்கப்படும் பெண் சக்தி விருதினைப் பெற வரும் 6-ந் தேதி வரை விண்ணப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பெண் சக்தி விருது சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ந்தேதி பெண் சக்தி விருது வழங்கிய ஜனாதிபதி கொடுத்து கௌரவித்து வருகிறார்.

முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களை ஊக்குவித்தல், பெண்களின் திறமையை ஊக்குவித்தல், கிராமப்புற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதுடன் 2 லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்படவுள்ளது. விருது பெற குறைந்தது 25 வயது உடைய தனி நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விருது பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை http://narishaktipuraskar.wcd.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...